இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Spread the love

மகாராஷ்டிரா: மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் பயணிகளிடையே அச்சதை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செய்திகள் அடிக்கடி நடத்துவாருவது, பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *