Spread the love

தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​த நிர்வாகிகள் & தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் எந்த காலத்​தி​லும் பாஜக​வுடன் கூட்​டணி இல்லை என்றும், தொடர்ந்து கூறிவந்​தார். அதை எதிர்க்கட்சியினர் பொய் என்று கூறி மறைமுக தொடர்பு பாஜகவுடன் இருப்பதாகவும் கூறிவந்தனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திடீரென மார்ச் 25ம் தேதி டெல்லி சென்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்​தார். தமிழக நலனுக்​காக சந்​தித்​த​தாக அவர் கூறி​னாலும், கூட்​டணி பேச்​சு​தான் என்​பதை அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சென்​னை​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா, ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் ஆலோ​சனை நடத்​திப் பிறகு மாலை​யில் கிண்​டி​யில் உள்ள ஓட்​டலில், அரு​கில் பழனி​சாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்​ளிட்​டோரை வைத்​துக் கொண்​டே, அதி​முக தலை​மை​யில்​தான் கூட்​டணி என்று அறி​வித்​தார்.

இந்த சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் வரக்கூடிய தேர்தலில் நின்று வெற்றிபெறலாம் என்று வேலை செய்தவர்கள் தொடரலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பலர் தோல்வி அடைந்ததற்கு முழு கரணம் பிஜேபி யுடன் கூட்டணிவைத்ததுதான் என்று ஜெயக்குமார், சீ.வி சண்முகம் கே.பி முனுசாமி மற்றும் அன்வர் ராஜா உட்பட பல முக்கிய தலைவர்கள் & மாவட்ட செயலர்கள் பகிரங்கமாக கூறிவந்தனர். வேலுமணி & தங்கமணி மட்டும் நாம் பிஜேபியுடன் கூட்டணிவைப்போம் என்று அப்போதிலிருந்த கூறிவந்ததாக சொல்லப்பட்டது.

அதிமுக தங்கள் ஓட்டு வங்கியை இழப்பதற்கு முழு காரணம் பிஜேபி யுடன் கூட்டணிவைத்ததுதான். ஏனேன்றால் சிறுபான்மையிர்னரின் ஓட்டு பல இடங்களிலில் வெற்றியை தீர்மாணிப்பதாக உள்ளது. பல இடங்களிலில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாக பல தொகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களில் ஓட்டும் அதிமுகவின் திராவிட சித்தாத்ததில் உள்ள தொண்டர்களின் ஓட்டும்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறுமா என்பது சந்தேகமே?. எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் செய்ப்பது சந்தகமே என்று நிர்வாகிகள் முனுமுனுக்கின்றனர்.

கடந்த காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது எனும் ஏகமனதான தீர்மானத்தை அறிவித்தவுடன் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *