ஆஸ்கர் குழுவில் உலகநாயகன்

Spread the love

சினிமா துறையில் உட்சபட்சமான விருதாகிய ஆஸ்கர் விருதுக்​கான தேர்​வுக்​குழு​வில் இடம்​பெறு​வதற்கு நடிகர் கமல்​ஹாசனுக்கு ஆஸ்​கர் விருது குழு, அழைப்பு விடுத்​துள்​ளது. மேலும் உலகள​வில் 534 திரைக்​கலைஞர்​களுக்கு இந்த அழைப்பு விடுக்​கப்பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, காஸ்​டிங் இயக்​குநர் கரண் மாலி, ஒளிப்​ப​தி​வாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவ​மைப்​பாளர் மாக்​ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்​ரா, இயக்​குநர் பாயல் கபாடியா ஆகியோ​ருக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆஸ்​கர் விருதுகள் வழங்​கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடை​பெறுகிறது. விருது பரிந்​துரைகளுக்​கான வாக்​களிப்​பு, ஜன. 12 முதல் 16 வரை நடை​பெறும். பரிந்​துரைகள், ஜன. 22-ல் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்.

இவர்​கள் அனை​வரும் இந்த அழைப்பை ஏற்​றுக்​கொண்​டால் ஆஸ்​கர் குழு உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை 11,120 ஆகவும்​ அதில்​ வாக்​களிக்​கும்​ உரிமை பெற்றவர்​களின்​ எண்​ணிக்​கை 10,143-ஆகவும்​ உயரும்​. ஆஸ்​கர்​ அகாட​மி​யில்​ உறுப்பினர்​ ஆவதற்​கு அழைக்​கப்​படுவது ​திரைத்​துறை​யில்​ கவுரவமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *