இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா உள்துறை அமைச்சார் அமித்ஷாவின் மகன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டர். ஜெய்ஷா அவர்கள் (பி.சி.சி.ஐ.) செயலாளராக தேர்தேடுக்கப்பட்டபோது பல சர்சைகள் பேசப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியாவை தலைவர் ரோஜர் பின்னி நியமித்துள்ளார்.
