நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதில் தமிழகம் முதல் அணைத்து மாநில எதிர் கட்சிகலில் உள்ள எம்.பி களும் எதிராக பேசினர். சில ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் சில கட்சிகலே இந்த சட்டத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர். ஆனால் வாக்கெடுக்குப்பில் கலந்து கொண்டு பின் நடந்த விவாதத்தில் கலந்து கொள்ளாத எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளாதது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இது சம்பந்தமாக எஸ்.டி.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா விவாதத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா கலந்து கொள்ளாதது சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே தெரிவித்தார். இதற்கு தெளிவான விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதார்.
