SIR 12 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்..!
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R. நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)12 மாநிலங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்தார். நடைமுறையின் கீழ் வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
SIR என்றால் என்ன?
அரசியல் கட்சிகள் பட்டியல்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேவை, இந்த செயல்முறை ஏற்கனவே 1951 முதல் 2004 வரை எட்டு முறை செய்யப்பட்டுள்ளது. கடைசி இது 21 ஆண்டுகளுக்கு முன்பு 2002-2004 இல் செய்யப்பட்டது.
அடிக்கடி இடம்பெயர்வு காரணமாக வாக்காளர் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் விளைவாக வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்படுவது, நீக்கப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்படாதது மற்றும் வெளிநாட்டினரின் நுழைவு தவறாக சேர்க்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
தகுதியுள்ள எந்த வாக்காளர்களும் விடுபட்டிருக்கவில்லை என்பதையும், வாக்குச்சாவடிப் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பதையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உறுதி செய்யும், பீகாரைப் போலவே, SIR கட்டம் 2 இல் ஆதார் எண் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்த திட்டம்வங்கத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. திருணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பில் கூறப்படுவது என்னவென்றால் 3,1/3 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் பீகாரில் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
