இந்தியாவில் இயற்கை எரிவாயு,கனிம வளங்கள் இருப்புகளை கண்டறிய மத்திய அரசு சார்பில் பல்வேறு தனியார் நிறுவங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் ஆயில் இந்தியா (Oil India) என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வளம் இருப்பதை உறுதி செய்துள்ளது.
வளங்களின் அளவு மற்றும் அதன் வணிக ரீதியான பயன்பாடு குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கனிமவளங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வைக்கும். இதனால் பல்வேறு நாடுகளும் கனிமவளங்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் கனிம வளங்கள் மக்கள் வாழ்விற்கு மிக முக்கிய பங்காற்றும் என்றும் அதை நாம் பாதுகாக்க வேண்டியது அனைவரும் மீதும் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கனிம வளங்களை ஆழிப்பதின் மூலம் உலகை நாம் அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக அமையும். கடல் வாழ் உயுரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
