தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி , புதுக்கோட்டை, தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் வெளியுட்டுள்ளது.
ஆனால் கடந்த ஐந்து நாட்களாக இராமநாதபுரத்தை சுற்றியுள்ள ஊர்களின் மிக கனமழை பெய்து வருகிறது. இதுவரை மழை விடாமல் பெய்து வருவதால் விவசாய வேலைகள் நடைபெறவில்லை, அதுபோல பள்ளிக்கூடங்கள் கடந்த நான்கு ஐந்து நாட்களாக கடும் மழையால் திறக்கவில்லை. அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் இந்த சமயத்தில் மாணவரர்கள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு குளங்கள் நிரம்பி உள்ளதால் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக டிசம்பர் மாதங்களில் வெல்ல பேருக்கு போல மழை பெய்து வருகிறது குறிப்பிடப்பட்டுள்ளது.
